மரத்தில் சிக்கி கொண்டு காயமடைந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் கிழக்குப் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கரடி தேன் கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி உள்ளது. இதனை அடுத்து தேன் குடித்து கொண்டிருந்த போது கரடியின் கை அந்த மரத்தில் இருந்த பொந்திற்குள் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காயமடைந்த கரடியால் மரத்திலிருந்து கீழே […]
