சாலையோரம் பெண் கரடி குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறியூர் சாலையோரம் கரடி குட்டி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
