கரடி தாக்கியதால் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கியிருந்த கரடி ராகுல் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனால் அலறி துடித்த ராகுலின் சத்தம் […]
