Categories
அரசியல் மாநில செய்திகள்

பகுஜன் சமாஜுடன் காங்கிரஸ் கூட்டணி…. வெளியான பரபரப்பு தகவல்..!!

ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் “தனித்து போட்டியிடுவோம்”- மாயாவதி..!!

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து  மக்களவை தேர்தலை எதிர் கொண்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. மீதமுள்ள 62 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றியது. இதை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார்.!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார்  என  எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு   நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக   இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை கைவிட்ட RSS” அச்சத்தில் மோடி…. மாயாவதி பரபரப்பு தகவல்…!!

பாஜகவை RSS கைவிட்டுவிட்டதால் பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக […]

Categories
தேசிய செய்திகள்

“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!

ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே  தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண் முன்னேயே அவரது  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த  கொடூர சம்பவத்தை  வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த […]

Categories

Tech |