சகோதரர்கள் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா ஜெயவர்தன் என்பவரும், அவரது சகோதரரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதால் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது முதலில் அவரை இறக்கி விட்ட பிறகு சூர்யா தனது உடைமைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரயில் எழும்பூருக்கு புறப்பட்டுள்ளது. இதனால் ரயிலிலேயே […]
