பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் […]
