பரபரப்பாக நடந்த “இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல் இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் ‘டை’ ஆனது. ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் […]
