நல்லவர் போல பேசி நடித்து குழந்தையை திருடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பர்மா காலனியில் கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவர் தனது காதல் மனைவியான ராஜலட்சுமியுடன் வசித்து வருகிறார். ராஜலட்சுமி கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் ஒரு பெண் தனது உறவினர் பெண்ணின் பிரசவத்திற்காக வந்ததாக கூறி அவரிடம் பழகியுள்ளார். மேலும் […]
