முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த பாபுலால் கவுர் (வயது 89) 2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
