சாலையில் பூசணிக்காய் உடைத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்டுதோறும் ஆயுத பூஜை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்துவிட்டு திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பூசணிக்காயை உடைப்பதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
