சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
