ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கோழைத்தனமாக கொன்றுள்ளதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) விமர்சித்துள்ளார். இஸ்லாமிய நாடான ஈரானில் வெள்ளிதோறும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு இன்று (ஜனவரி 17) நடைபெற்ற பிரார்த்தனையில் திடீரென்று பங்கேற்ற ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்கா எவ்வளவு அழுத்தங்களைத் தந்தாலும் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது. […]
