தமிழகத்தில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனால் போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மக்களின் […]
