ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் […]
