வாலிபர்கள் கண்டக்டரை தாக்கியதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கொந்தமூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளை அங்குள்ள பாலத்தின் மேல் இறக்கி விட்டு செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று கொந்தமூர் கிராம மக்கள் கூறி வந்துள்ளனர். […]
