புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பால் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு 24 மணி நேரம் தடையின்றி தரமான பால் கிடைக்கும் என்றும் வேளாண்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக கறவை மாடு மூலம் கலப்படமற்ற பசும்பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை சார்பில் தானியங்கி பால் வழங்கும் ATM இயந்திரம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக […]
