தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சினிமா உதவி இயக்குனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேற்கு மாம்பலம் பகுதியை விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். […]
