சொத்துப் பிரச்சனை காரணமாக தன்னுடைய வீட்டை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வஸ்தா சாவடி அரசுப்பள்ளி அருகில் பிரேமா நாகராஜ் என்பவர் தன்னுடைய தாய் – தந்தையோடு வசித்து வருகின்றார். இந்த நிலையில் சொத்துப் பிரச்சனை காரணமாக பிரேமா நாகராஜிடம், வீட்டைக் காலிசெய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி அவரது உறவினர்கள் பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டை […]
