தேர்வு கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டதால், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்த […]
