சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் கல்லாறு பழப்பண்ணையில் வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதியை ஒட்டி 8.92 ஹெக்டேர் பரப்பளவில் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. இந்தப் பண்ணையில் பல வகையான அலங்கார செடி வகைகள், வாசனை திரவியப் பயிர்கள், பழமரங்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பண்ணைக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவதற்கு மட்டும் […]
