விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]
