கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக […]
