கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசொகுசு கார்களில் […]
