அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை […]
