பரமத்தி வேலூர் அருகேயுள்ள திருப்பதி முனியப்பசாமி கோயிலில் 2 ஆயிரத்து 500 கிலோ ஆடுக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்திப் பெற்ற 60 அடி உயரம், 25 அடி அருவாள் ஏந்திய திருப்பதி முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. […]
