மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]
