ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அஜித்குமார் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைபடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் வலிமை என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத் குமாரை நேரில் சந்தித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். […]
