ஏசி எந்திரம் வெடித்து சிதறியதில் மருத்துவமனை ஆய்வகம் முழுவதும் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆர்.என்.ஏ கண்டறியும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் அந்த ஆய்வகம் முழுவதும் தீக்கிரையானது. அதோடு ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததால் அவை வெடித்து அந்த இடமே […]
