தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் சில வாரங்களுக்கு முன்பு தான் செமஸ்டர் தேர்வு முடிந்தது. அந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் வைக்கப்பட்டது. குறிப்பாக, பொறியியல் தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று நேரடி தேர்வு முறையில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் தற்போது சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பல கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் […]
