எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]
