Categories
அரசியல் மாநில செய்திகள்

1 தொகுதிலாவது ஜெயிக்க முடியுமா ? அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிடக் கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் நின்று வென்று விட்டு பேசட்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதவி மமதையில்பேசுறாங்க” காலம் பதில் சொல்லும் – டிடிவி அதிரடி ….!!

பதவி மமதையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு காலம் தக்க பாடம் புகுட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் தான் காரணம் …. ”15 நாள் சாமியாராக இருப்பார்” ….. கதறி அழுத நிர்மலா தேவி …!!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் கதறி அழதபடி வெளியேறினார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக அவரின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேசுனாங்க….. எனக்கு தெரியாது ….. பொன் ராதாகிருஷ்ணன் பளிச் ….!!

குருமூர்த்தி, பன்னீர்செல்வம் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது’ என்றார். தொடர்ந்து, ‘மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஒரு மாதம் காலம் அவகாசம் கொடுத்தும் காங்கிரஸ், சிவசேனா, […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”தண்ணீ குடிச்சா கண்காணியுங்க” ஆசிரியருக்கு புது உத்தரவு …!!

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின விழாவின் போது மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பார்வையிடவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திமுக தான் எங்களுக்கு எதிரி; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதிரி’ – நச் பஞ்ச் அடித்த செல்லூர் ராஜூ..!!

திமுகதான் அதிமுகவுக்கு நிரந்தர எதிரி எனவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் உதிரி எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அவருக்கும் அதிமுகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. குறிப்பாக, அதிமுக குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளை நாங்கள் மதிப்பதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீட் தேர்வில் இருந்து விலக்கு” அதிமுக அதிரடி தீர்மானம் ….!!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:45 மணிக்குத் தொடங்கியது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுமாா் 2,500 போ் வரையிலும், செயற்குழு உறுப்பினா்கள் ஆயிரம் போ் வரையிலும் உள்ளனா். கூட்டத்தில் பங்கேற்க வரும்போது அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்….! ஆத்திரமடைந்த ஸ்டாலின்….!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கே இப்படீன்னா… மக்களின் நிலை?.. அசிங்கப்பட்ட அமைச்சர்கள்… ஆத்திரமடைந்த ஸ்டாலின்.!!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

குண்டு விளாயட வந்திருக்கோமா? தாசில்தாரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன் …!!

தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கல்யாணத்துக்கு வந்துருங்க…. OPS-EPS_க்கு அழைப்பிதழ்கொடுத்த சதீஸ்…!!

நடிகர் சதீஸ் தனது திருமண அழைப்பிதழை தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வழங்கினார். காமெடி நடிகர் சதீஷ் ‘தமிழ் படம்’ மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர், கத்தி, ரெமோ, ஆம்பள, தமிழ் படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல், கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சிகளும் ரெடியா… ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம்… சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிமுக மகளிரணிச் செயலராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்… திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடத்துநராக இருந்த ரஜினி ‘சூப்பர் ஸ்டார் ஆவோம்’ என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்”

நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று தனது கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ரஜினியைத் தாக்கியுள்ளது. திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் கமல்ஹாசனுக்கு ‘உங்களில் நான்’ என்ற பாராட்டு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, “எடப்பாடி பழனிசாமியின் அரசு நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்…!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 7 _இல் நடைபெற்று முடிந்தது.இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் இன்று கூடி இருக்கிறது.இதில் பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது . உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் , நகராட்சி   , பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை […]

Categories
Uncategorized

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி விசிக புகார்!

 திருமாவளவனை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்ட அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி, பூந்தமல்லி காவல்நிலையத்தில் விசிக-வினர் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்து ஆலயங்கள் குறித்து பேசியது சர்சைக்குள்ளானது. இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அடுத்த பூந்தமல்லியில் வசிக்கும் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: கேப்டன் கேட்பது கிடைக்குமா?

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே […]

Categories
Uncategorized

பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!

பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு வேறு வேலையே இல்லை – நிலோபர் கபில்…..!!

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குறை கூறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி, கமல் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார். நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 821 பயனாளிகளுக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு..!!

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து  டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய  வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

21_க்குள்ள முடிவெடுங்க …. 15 நாளில் திறங்க…. எச்சரிக்கும் செந்தில் பாலாஜி …!!

நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

பால் பாக்கெட் தூக்கி ஏறியப்படும்.. ”யாருக்கும் பலன் இல்லை”….மாத்தி யோசிங்க …..!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

”பொது இடங்களில் திருக்குறள்” பதிவு செய்ய தொல். திருமாவளவன் வேண்டுகோள் …!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உச்சி முதல் பாதம் வரை” திமுக ஜெயிக்கும் ….. உளறி தள்ளிய அமைச்சர் …!!

நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதாக அமைச்சர் கே.சி. வீரமணி உளறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்’ – ஜி.கே.வாசன்

சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்…கால் பட்டா குத்தம் – அமைச்சர் காமராஜ் காட்டம்

வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பிறாண்டுவதிலேயே ஸ்டாலின் குறி – செல்லூர் ராஜு

 “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை…!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருதை வழங்கினார். ஆனால் இன்று வெளியாகவிருந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் சேதுபதி உள்பட சில திரைத் துறையினருக்கு கலைமாமணி விருதை அறிவித்தது.ஆகஸ்ட் மாதமே இந்த விருது கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விஜய் சேதுபதி அவ்விருதை பெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை – தம்பிதுரை

“தமிழ்நாட்டில் தற்போது வெற்றிடம் ஏதுமில்லை மேலோகத்தில் சென்று பார்த்தால் வெற்றிடம் இருப்பது போல் தெரியும்” என்று நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு, தம்பிதுரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் – பாத்திமாவின் தந்தை

 என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

பாத்திமா தற்கொலை : விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ..!!

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பிறகு நேற்று இருந்தே அதன் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  தொடங்கினர்.  மத்திய குற்றப்பிரிவு விசாரணை குழுவினர் சென்னை ஐஐடி சென்று அங்குள்ள மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.  நேற்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஐஐடி_க்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி_யை முற்றுகையிட்டு திமுக மாணவரணி போராட்டம் …!!

மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றது. சென்னை ஐஐடி மாணவி பார்த்திபா தற்கொலை வழக்கில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஐஐடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது திமுக மாணவரணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திமுக மாணவர் அணி மாநில துணை செயலாள  தலைமையில் இந்த போராட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது – ஸ்டாலின் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் .  சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொதுப்பணித் துறை , கட்டடங்கள் , நீர்வளத்துறை ஆகிய துறைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறை மாநில, மண்டல பொறியாளர்கள் பங்கேற்ற்றுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பங்கேற்றிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிமரத்து பணிகள் குறித்தும் , அத்திக்கடவு அவிநாசி திட்டம்  குறித்து விவாதிக்கப்படுகின்றது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா ? எந்த அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவி பாத்திமாவின் தந்தை முதல்வருடன் சந்திப்பு ….!!

ஐஐடி_யில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று தமிழக முதல்வரை சந்திக்க இருக்கின்றார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர்.இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறார். இன்று மதியம் விமானம் மூலமாக அவருடைய பெற்றோர் சென்னை வருகிறார்கள்.அதன் பிறகு நேரடியாக தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திக்க அனுமதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் ”தில்லுமுல்லு” முக.ஸ்டாலின் காட்டம் …!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவு பின்வருமாறு: ”உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? […]

Categories
அரசியல்

’இவர் மூலம்தான் எடப்பாடி எனக்கு தூது விட்டார்’ – அமமுக பழனியப்பன்

அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார். அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார். ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படம் தான் பிடிக்கும்…. அப்போ ரஜினியை பிடிக்காதா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலின் நாக்கில் சனி’ – அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ஸ்டாலின் நாக்கில் சனி இருப்பதால்தான் அனைத்தையும் தவறாகவே பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், […]

Categories
மாநில செய்திகள்

மாசில்லா தமிழ்நாடு…. ”10,00,000 மாணவர்கள்” கின்னஸ் சாதனை… தொடங்கி வைத்த முதல்வர் …!!

 நெகிழி விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ‘பிளாஸ்டிக்’ எனப்படும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நெகிழிப் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

”சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்” ஆசியா விருது பெற்று மாஸ் காட்டிய OPS ….!!

10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ” சர்வதேச வளர்ந்து வரும் தலைவர் ஆசியா விருது ” விருது அளிக்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்காவின் ஓக் புரூக் டெரஸிஸ் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் […]

Categories
மாநில செய்திகள்

பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்….. ”பாஜக கோரிக்கை” OK சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியதுதான் திரும்பியது, எங்கு திரும்பினாலும் ஒரே திருவள்ளுவர் மயம்தான். திருவள்ளுவர் உயிருடன் இருந்தால் ‘இத்தன நாள் நீங்கலாம் எங்கடா இருந்தீங்க?’ என்று வடிவேலு கணக்காக கேட்கின்ற அளவுக்கு நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அவர் மீது அன்பை வாரி இரைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய தகவல் ஒன்றை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”அதிமுகவுக்கு வந்த சோதனை” பேனரை போல மீண்டும் ஒரு விபத்து …!!

அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து […]

Categories

Tech |