இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற முன்னாள் துணை அதிபர் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் . மாலத்தீவிற்கு கருங்கல் இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு திரும்பிய விர்கோ என்ற இழுவை கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் சட்டவிரோதமாக நுழைந்தார் . இந்த இழுவை கப்பல் நடுக்கடலில் வந்தபோது நேற்று முன்தினம் அதிகாலை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் மறித்து சோதனை செய்தனர் . அதில் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் […]
