ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. […]
