பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வார சந்தையில் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் இருக்கும் சந்தை மேட்டில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது. அதன்பின் இங்கு முக்கிய பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரம் அதிக […]
