கேட் மீது ஏறி நின்றதை தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் துணை நடிகை மற்றும் அவரது மகனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் துணை நடிகையான பாண்டி லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் துணை நடிகையாக பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு வீட்டின் கேட் மீது ஏறி நின்ற சில மர்ம நபர்கள் புறாவை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]
