மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாரடையூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டபிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்ட பிரபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேட்டைக்காரன்புதூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டபிரபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
