12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள், தமிழக அரசு வழங்கும் விலையில்லா இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரான சுகன்யா, எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் 2017-18, 2018-19 -ஆம் ஆண்டு காலங்களில் 12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள் தகுந்த சான்றிதழ்களை பள்ளியில் கொடுத்து விலையில்லா இலவச மடிக்கணினிகளை […]
