மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் […]
