ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]
