ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]
