விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சாத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக அம்மாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு பேரை பிடித்து […]
