அரசிற்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள. கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள் மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மத்திய பிரதேசத்திற்கு சொந்தமான பீச்கிராப்ட் கிங் ஏர் பி250 ரக விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6 ம் தேதி அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு 71 ரெம்டெசிவர் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது விபத்தில் விமானம் சேதமடைந்தது. அப்போது விமானத்தை இயக்கியவர் கேப்டன் மஜீத் அத்தர், […]
