மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் […]
