கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெல்லாதி என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வந்த சிறுவன் பாலியல் தொல்லை […]
