விளையாட சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜன்-கமலா தம்பதியினர். இவர்களுடைய மகன் ஆதவன் வயது 8, இந்த சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் பதற்றம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் அச்சிறுவனின் […]
