விழுப்புரத்தில் 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜான் பால் என்பவர். இவருக்கு 40 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜேஸ்மின்(35) கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 8 வயதுடைய ரெமி எட்வின் எனும் மகன் இருந்துள்ளார். ரெமி எட்வின் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]
