புதுக்கோட்டையில் தான் பெற்ற மகளிடமே தவறாக நடந்துகொண்ட விவசாயிக்கு 7 வ்ருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டையில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி, 17 வயதாகும் தன் சொந்த மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் அந்த விவசாயியை கைது செய்துள்ளனர். […]
