நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் […]
