ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியத்தை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து நேற்று முதல் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அனைத்து செயல்பாடுகளும் உத்தரவின்படி முடக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் […]
