விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முழு ஊரடங்கின் போதும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து செவல்பட்டி பகுதியில் உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் மது […]
